ரஊப் ஹக்கீம் மற்றும் றிஷாட் பதீயுதின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது,
அதிகாரமில்லாமல் போனால் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயட்பாடுகள் அதிகரிக்கும் மற்றும் முஸ்லீம் சமூகத்தின் இதர நலன்களையும் கருதி அரசுடன் இணைவதட்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெருவதாக அறிய முடிகிறது.
இது தொடர்பான பேச்சு வார்த்தையில் பசில் ராஜபக்ச ஈடுபட்டுள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் மிக விரைவில் தனது புதிய முடிவை அறிவிப்பார் எனவும் இவ்வாறு இணைந்தால் முன்னர் வகித்த அதே அமைச்சுக்கள் வழங்கப்படும் என பசில் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-நமது செய்தியாளர்-