கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாத பயணிகளிடமிருந்து பஸ் கட்டணத்தை இரண்டு மடங்காக அதிகரித்து அறவிடுவதற்கான அனுமதியை வழங்குமாறு, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாதவர்களால், பொது போக்குவரத்து சேவையை அதிகரித்து கொள்ள முடியாத நிலைமையொன்றும் ஏற்பட்டுள்ளது என தனியார் பஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளனர்.