கட்டாரிலுள்ள இலங்கை உணவகத்திற்கு பூட்டு - மக்கள் அவதியில்

கட்டார் நாட்டிலுள்ள இலங்கை உணவகத்தை மூடுவதற்கு கட்டார் அரசு  உத்தரவு பிறப்பித்துள்ளது .
கட்டாரில் மிகவும் பிரபல்யமான இலங்கை உணவகமான 'லக்பிம'  மூன்று கிளை நிறுவனங்களை  கொண்டுள்ளது .

அதிகமான இலங்கை வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள லக்பிம இன் நஜ்மா கிளையிட்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட நகர சபையினர் குறித்த உணவகமானது நகராட்சி சட்டத்தை மீறியதாக தெரிவித்து மூடுமாறு உத்தரவு தெரிவித்துள்ளனர்.

இங்கே தொடர்ச்சியாக உணவுகளை எடுத்துக்கொண்டிருந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் 

குறித்த தடை உத்தரவு நீக்கப்பட்டே பின்னரே அவ் உணவகம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post Next Post