மாகாண சபை முறைமை ஒழிப்பு-இறுதி தீர்மானம் இல்லை என்கிறார் இராஜாங்க அமைச்ச​ர்

மாகாண சபை முறைமையை ஒழிப்பது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்ச​ர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 


மாகாண சபைச் செயலாளர்கள், ஆணையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் மேற்படி விடயங்களை தெரிவித்துள்ளார்.

மேலும், மாகாண சபை முறைமையூடாக இறந்த நபரொருவருக்கான இறுதி கிரியை​களை செய்வதற்கான முற்பதிவுகளை இணையத்தினூடாக செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் அறிவுருத்தியுள்ளார். 

Previous Post Next Post