நாட்டிலுள்ள பிரதான ஆறு இலத்திரனியல் கல்வியற் கல்லூரிகளுக்கு இணைத்துக்கொள்ளும் மாணவர்களின் தொகையை அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மேற்படி கல்லூரிகளுக்காக 405 மாகணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதான ஆறு இலத்திரனியல் பீடங்களான, பேராதெனிய,ஜயவர்தனபுர, யாழ்ப்பாணம்,ருஹுனு,மொறடுவ, தென்கிழக்கு பீடங்களுக்வே மேற்படி 405 பேரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்தோடு, அமைச்சர் என்ற வகையில் கூட நாட்டிலுள்ள பல்கலைக்கழக கட்டமைப்புக்குள் தலையீடு செய்யும் எண்ணம் தமக்கு இல்லையென தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை சாத்தியமாக்கி கொள்வதே தனது இலக்காகும் என்றும் தெரிவித்துள்ளார்.