பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 ஆயிரம் கிலோகிராம் மஞ்சள் மீட்பு

களஞ்சியசாலை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் தூள் தொகையுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புளுமெண்டல் பகுதியில் உள்ள குறித்த களஞ்சியசாலையில் இருந்து 33,000 கிலோகிராம் மஞ்சள் தூள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மூன்று கொள்கலன்களில் குறித்த மஞ்சள் தொகை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post