பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவித்தல்-நாடு முழுவதும் சுற்றி வளைப்பு

அனுமதிக்கப்படாத தீ ஆயுதங்கள் , துப்பாக்கி ரவைகள் மற்றும் வெடிபொருட்களை கையளிப்பதற்கான பொது மன்னிப்பு காலத்தினை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதற்கமைய அனுமதியில்லாமல் தம் வசம் தீ ஆயுதங்கள் , துப்பாக்கி ரவைகள் மற்றும் வெடிபொருட்களை வைத்திருப்போர் 2020.02.05 தொடக்கம் 2020.02.12 வரை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அவற்றை ஒப்படைக்க முடியும் எனவும் குறித்த காலப்பகுதியில் ஒப்படைப்போருக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பொது மன்னிப்பு காலம் முடிவடைந்த பிறகு நாடு பூராகவும் சுற்றிவளைப்புக்கள் இடம்பெறவுள்ளது, இதன்போது சட்ட விரோத தீ ஆயுதங்கள் , துப்பாக்கி ரவைகள் மற்றும் வெடிபொருட்களை வைத்திருப்போரை கைது செய்து அவர்களுக்கு எதிராக  வழக்கு தொடுப்பதை தடுப்பதற்காக இந்த பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு மக்களிடம் வேண்டுகிறது.




Previous Post Next Post