பொத்துவில் பொலிஸாரினால் திடீர் சுற்றிவளைப்பு (video)

நேற்று இரவு பொத்துவில் ஹூலானுகல பகுதியில் பொத்துவில் பொலிஸாரினால் திடீர் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பொத்துவில் பொலிஸ்நிலைய பொருப்பதிகாரி வசந்த குமார தலைமையில் இடம்பெற்ற இச்சுற்றிவளைப்பின் போது சுமார் 5 லட்சம் பெருமதியான களவாடப்பட்ட சோள விதைகள் கைப்பற்றப்பட்டன.

குறிப்பிட்ட பகுதியில் கடை ஒன்றை உடைத்து களவாடப்பட்ட பொருட்களே இவையாகும். இது தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-Thameem pottuvil-


Previous Post Next Post