2015ம் ஆண்டிற்கான உற்பத்தி திறன் விருது பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு

தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட உற்பத்தி திறன் போட்டியில் பொத்துவில் பிரதேச செயலகம்  2015ம் ஆண்டுக்கான உற்பத்தித் திறன் விருதினைப் பெற்றுள்ளது.
மக்களுக்கான சேவையினை கடந்த வருடங்களை விட 2015ம் ஆண்டு மிக வேகமாகவும், நேர்த்தியாகவும், வினைத்திறனாகவும் மேற்கொண்டமைக்காவே குறித்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருதினைப் பெற்றுக் கொள்வதற்கு பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களின் வினைத்திறனான செயற்பாடு ஒரு இன்றியமையதா காரணமாகும். பொதுமக்களுடனான தொடர்பாடல் அவர்களுக்கான சேவையை விரைவுபடுத்தல் என்பன நேர்த்தியாக வழங்கப்படுகின்ற போது பயனுள்ளதும் விரைவானதுமான பயனை பொதுமக்கள் பெற்றுக் கொள்கின்றேனர்.







இவ்வாறு வழங்கியதன் மூலமே குறித்த விருதை வரலாற்றில் முதல் தடவையாக தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.


-எம்.எஸ்.சம்சுல் ஹுதா-

Previous Post Next Post