ஐக்கிய தேசியக் ஆட்சிக் காலத்தில் தான் வீடுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம் சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் வீடுகள் இல்லாத அனைத்து மக்களுக்கும் வீடுகளைப் பெற்றுக் கொடுப்போம் என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.                  

                  திருகோணமலையில் இன்று வெள்ளிக்கிழமை(1) மக்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.      

          அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்:திருகோணமலை மாவட்டத்தில் புதிய வீடமைப்புத் திட்டங்களையும், வசதிகளையும் எமது அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.எமது ஐக்கிய தேசியக் ஆட்சிக் காலத்திலே தான் அதிகமாக வீடமைப்புத் திட்டங்களையும் மக்களுக்காக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.தற்போது எமது கட்சிக்குள்ளே பல குழப்பவாதிகளும் பிரச்சினைகள் கொடுப்போரும் இருந்து வருகின்றனர்.அதற்கு தாம் சரியான முடிவுகளை வைத்துள்ளோம் என்றார்.
-எப்.முபாரக்-

Previous Post Next Post