Top News

பொத்துவில் பிரதேச செயலகத்தினால் சீமெந்து மூட்டைகள் வழங்கிவைப்பு

பொத்துவில் பிரதேச செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் சீமெந்து மூட்டைகள் வழங்கிவைப்பு.
பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முஸர்ரத் தலைமையில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட ஐம்பத்தாறு முஸ்லிம், தமிழ், சிங்கள பயணாளிகளுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட சீமெந்து மூட்டைகள் பிரதம அதிதி சுகாதாரப் பிரதியமைச்சர் பைசல் காஸிமினால் அன்மையில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

தலா ஒரு வீட்டிற்கு பத்து மூட்டைகள் வீதம் தெரிவு செய்யப்பட்ட ஐம்பத்தாறு பயணாளிகளுக்கு இரண்டாம் கட்டமாக வழங்கிவைக்கப்பட்ட நிகழ்வில் பொத்துவில் முன்னைநாள் தவிசாளரும் சி.ல.மு.காங்கிரசின் பொத்துவில் அமைப்பாளருமான எம்.எஸ்.அப்துல் வாசித், தே.வீ.அ.சபையின் கல்முனைப் பிராந்தியத் தலைவர் மற்றும் வீடமைப்பு உத்தியோகத்தர்களோடு பிரதியமைச்சரின் இணைப்பாளரும் கலந்து கொண்டனர்.

இதன் முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட எழுபத்தாறு பயணாளிகளுக்கு அன்மையில் பிரதேச செயலகத்தினால் சீமெந்து மூட்டைகள் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-மரியமின் புத்திரன்-
Previous Post Next Post