கம்மன்பில தனிமைப்படுத்தலில்-வலுச் சக்தி அமைச்சுக்கும் பூட்டு

வலுச் சக்தி அமைச்சின் அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியதையடுத்து, தானும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


தொற்றுநீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 6 ஆம்திகதி வரை வலுச் சக்தி அமைச்சு மூடப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பதிவில் கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது அன்டிஜன் பரிசோதனை முடிவின் படி, தான் தொற்றுக்குள்ளாகவில்லை என்றும் எனினும், தான் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post