தடுப்பூசி ஏற்றிக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இன்று (03) கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளார்.


வைத்தியரின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசி பெற நடவடிக்கை எடுத்ததாக எதிர்க்கட்சி தலைவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு கொவிட் சிகிச்சை அளித்த வைத்தியர்களின் கடுமையான ஆலோசனையின் பேரில், இன்று தடுப்பூசி போடப்பட்டதாகவும் தடுப்பூசி போடத் தவறினால், தான் மீண்டும் கொவிட் தொற்றுக்குள்ளாகலாம், அது ஆபத்தானது என்று வைத்தியர்கள் கடுமையாக எச்சரித்தனர் என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், தனது தற்போதைய உடல்நிலையின் படி, அவர்களின் உத்தரவை ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை நாட்டில் உள்ள சகலருக்கும் தடுப்பூசி ஏற்றாமல் நான் தடுப்பூசி ஏற்ற மாட்டேன் என அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post