பொத்துவிலிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் வண்டி விபத்து,ஒருவர் பலி ஐவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி.
பொத்துவில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு 9.30 மணிக்கு பயணமான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியானது இரத்தினபுரி - காவத்த பிரதான வீதியில் தனியார் லோரி வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது.
இவ்விபத்தில் காயமுற்றோர் காவத்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் அவசர சிகிச்சைக்காக பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்ட 6 பேரில் பஸ் வண்டியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மேலும் ஐந்து பேர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-செய்தியாளர்:எஸ்.எம்.ருஸ்திக்-
பொத்துவில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு 9.30 மணிக்கு பயணமான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியானது இரத்தினபுரி - காவத்த பிரதான வீதியில் தனியார் லோரி வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது.
இவ்விபத்தில் காயமுற்றோர் காவத்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் அவசர சிகிச்சைக்காக பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்ட 6 பேரில் பஸ் வண்டியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மேலும் ஐந்து பேர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-செய்தியாளர்:எஸ்.எம்.ருஸ்திக்-