தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2016 ஆம் ஆண்டை வரவேற்கும் நிகழ்வும் சத்தியப்பிரமாணம் மற்றும் துஆ பிராத்தனையும்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2016 ஆம் ஆண்டை வரவேற்கும் நிகழ்வும், புதிய ஆண்டின் ஆரம்பத்தில் அரச ஊழியர்கள் மேற்கொள்ளும் சத்தியப்பிரமாண நிகழ்வும், துஆ பிராத்தனையும் 2016-01-01 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச் அப்துல் சத்தார் அவர்களது வழிநடத்தலில் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தலைமையில் பல்கலைக்கழக நிர்வாக கட்டிட முற்றலில் இடம்பெற்றது.
நிகழ்வுகள் தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன் ஆரம்பமாகி சத்தியப்பிரமாணம் நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கான இரண்டுநிமிட மௌனம், துஆ பிராத்தனை பின்னர் சிற்றூண்டி உண்டு மகிழும் நிகழ்வு என இடம்பெற்றது.
-எம்.வை.அமீர்-
Previous Post Next Post