அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுத் தொடர்பில் டுவீட் செய்துள்ள அமைச்சர் மஹிந்தானந்த, தனக்கு இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து குடும்பத்தாருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் தற்போது வரையில் தன்னுடன் தொடர்பிலிருந்த அரச ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.