சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு

பிறந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் புதுவருடத்தில் தங்களது கடமைகளை ஆரம்பிக்கு முகமாக புதுவருட உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இன்று (01.01.2016) வெள்ளிக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களினால் தேசிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்வில் சகல பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
-ஹாசிப் யாஸீன்-
Previous Post Next Post