சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கானுக்கு மாகாண சாஹித்திய விருது

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வு நேற்று 8 ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணாமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் 2014ம் ஆண்டு சிறந்த கவிதை நூலிற்கான மாகாண சாஹித்திய விருது காத்தான்குடியைச சேர்ந்த கவிஞரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான  ரீ.எல்.ஜவ்பர்கானுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டினால் வழங்கி வைக்கப்படுவதையும் அருகில் மாகாண விவசாய அமைச்சர் கவிஞர் ரி.துரைராஜசிங்கம் ,கல்வி அமைச்சர் கே.தண்டாயுதபாணி ,மாகாண கலாசாரப் பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரத்தினம் உட்பட அதிதிகள் நிற்பதையும் படங்களில் காணலாம்.
குறித்த நபர் fastlanka இணையத்தின் செய்தியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
-பழுலுல்லாஹ் பர்ஹான்-
Previous Post Next Post