பகிடிவதையை தாங்கிக்கொள்ள முடியாத மாணவி தற்கொலை-சப்ரகமுவ பல்கலைக்கழகம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் ஆண்டு கல்வி கற்று வந்த 23 வயது அமாலி சந்துரிக்கா என்ற மாணவி பல்கலைக்கழகத்தில் பகிடிவதை தாங்க முடியாமல் தனது  வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார் .


பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த குடும்பத்தின் ஒரே புள்ளியான இவர் சென்ற ஆண்டு பல்கலைக்கழக அனுமதி பெற்றார்.

பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட பகிடிவதையை தாங்கிக்கொள்ள முடியாமல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார் , மறுபடியும் கல்வியை தொடர்வதற்காக அவர் பல்கலைக்கழகம் சென்ற போது மீண்டும் பகிடிவதையை அனுபவித்துள்ளார்,இதனால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட குறித்த மாணவி "என் மரணத்திற்கு பின் என் உடலை நான் படித்த தேவி பாலிகா கல்லூரிக்கு அருகில் உள்ள கொழும்பு கனத்தையில் நல்லடக்கம் செய்யவும்,என் மரணத்திற்கு சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து எந்த மாணவனோ மாணவியோ வர அனுமதிக்க வேண்டாம் " என்று எழுதி வைத்து விட்டு தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார்.
(mn)
Previous Post Next Post