காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் 2014ம் ஆண்டு கடந்த அரை வருடத்துக்கான பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு கடந்த 16-02-2015 திங்கட்கிழமை நாவற்குடா ஜீவ ஒளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இவ் பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி. உபாலி ஜெயசிங்க கலந்துகொண்டு மேற்படி பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார்.
இங்கு பொலிஸ் பரிசோதனை விளையாட்டு மைதானத்திலும்; பொலிஸ் வாகன பரிசோதனை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்; காத்தான்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி. தசநாயக்க,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர உட்பட காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலுள்ள பல்வேறு பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இங்கு பொலிஸ் பரிசோதனை விளையாட்டு மைதானத்திலும்; பொலிஸ் வாகன பரிசோதனை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்; காத்தான்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி. தசநாயக்க,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர உட்பட காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலுள்ள பல்வேறு பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)