மு.காவின் வெற்றிக்காக செயற்பட்டவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக வாக்குச் சாவடிகளில் தேர்தல் முகவர்களாகசெயற்பட்டவர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (17) மாலை இடம்பெற்றது.


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமாகிய எ.எல்.எம்.நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனை மீலாத் நகர் அல் ஜெஸீறா வித்தியாலத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.முனாப், ஐ.எல்.நஸீர், மு.காவின் ஸ்தாபக செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபூர், உயர்பீட உறுப்பினர் யூ.எல்.வாஹிட், அல் ஜெஸீறா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் உள்ளிட்ட கட்சியின் பல முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக பல தியாகங்களையும் தேர்தல் காலங்களில் கட்சியின் வெற்றிக்காக வாக்குச் சாவடிகளில் தேர்தல் முகவர்களாகவும் செயற்பட்ட சுமார் 80 போராளிகளை கௌரவிக்கும் முகமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமாகிய எ.எல்.எம்.நஸீர் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.


இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுமார் 250 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு பகல் உணவு வழங்கி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.



-பைஷல் இஸ்மாயில்–
Previous Post Next Post