இன்று முதல்(2021/08/02) கட்டார் நாட்டுக்குள் இலங்கை , இந்தியா , பாக்கிஸ்தான் , பங்களாதேஷ் , பிலிப்பின்ஸ் , நேபால் போன்ற நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு விஷேட தனிமைப்படுத்தல் சட்டத்தை அறிவித்துள்ளது கட்டார் அரசு.
அதன்படி தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொண்டோர் மற்றும் நோய் தொற்றுக்குளாகி பூரண குணமடைந்தோர் இரண்டு நாட்கள் மட்டுமே தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்
அத்தோடு இரண்டாவது நாளில் மேட்கொள்ளப்படும் pcr முடிவு கொரோனா இல்லை என வந்தால் தங்களது இருப்பிடங்களுக்கு செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல சொன்ன நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத பயணிகள் பத்து நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.