மூன்று வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியை வழங்க ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் நோய் தொற்றுக்கு எதிராக போராடி மக்களை தொற்றிலிருந்து காப்பாற்ற முடியும் என நம்புவதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மூன்று வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட 900 சிறுவர்களுக்கு குறித்த தடுப்பூசி வழங்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதை அடுத்து சிறுவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதை உறுதி செய்த பின்னரே குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.