சீனாவின் நான்ஜிங் நகரத்தில் புதியதொரு வைரஸ் பரவி வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இம்மாதம் 20(July 20) அடையாளங்காணப்பட்ட இந்த புதிய வகை வைரஸ் இது வரை சுமார் 200 பேருக்கு தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது பல மாகாணங்களுக்கு பரவி இருக்கக்கூடும் எனும் சந்தேகத்தில் தீவிர பரிசோதனை இடம்பெற்று வருவதுடன் விரைவில் கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவின் புதிய வகையாக இருக்கலாம் எனும் அடிப்படையிலும் ஆய்வுகள் நடைபெறுவதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.