ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் ஆதாரவாளர்கள் தேசிய காங்கிரஸில் இணைவு (படங்கள் இணைப்பு)

தேசிய காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 'காலம் கழியும் உண்மை ஒளிரும் சத்தியம் மட்டுமே நித்தியம்' எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு கடந்த சனிக்கிழமை 2017.11.18ம் திகதி இரவு பொத்துவில் சின்ன உல்லை சென்டீ பீச் ஹோட்டலில் இடம்பெற்றது.
தேசிய காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளர் ஏ.பதுர்கான் ஆசிரியர் தலமையில் இடம்பெற்ற இந்நிகிழ்வில் தேசியக் காங்கிரஸின் தேசியத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹிஜ் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் ஆதாரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்



இதன் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் பிரதேச அமைப்பாளரும் பொத்துவில்  பெரிய ஜும்மாப் பள்ளிவாயில் தலைவருமான ஓய்வு பெற்ற மக்கள் வங்கி முகாமையாளர் எம்.எஸ்.எம்.சுபையிர், தொழிலதிபர்களான எம்.எஸ்.அன்சார், எஸ்.எம்.முசீன், மௌலவி அல்ஹாஜ் முகைதீன்பாவா, அறுகம்மை அபிவிருத்தி போரத்தின் தலைவர் எம்.எச்.எம்.ஜமாஹிம் உட்பட ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸின் ஆதாரவாளர்கள் பலர் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவுடன் இணைந்து கொண்டனர்.
 

 



-தேசிய காங்கிரஸ் ஊடகப் பிரிவு பொத்துவில்-
Previous Post Next Post