இலங்கை தென்கிழக்கு கடற்படைத் தலமையகத்தில் கடமையாற்றி வந்த கடற்படை வீரர் ஒருவர் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
பாணமை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட தென்கிழக்கு கடற்படைத் தலமையகத்தில் கடற்படை வீரராக கடமையாற்றி வந்த 35வயதுடைய அம்பாறை தமன பிரதேசத்தைச் சேர்ந்த W.S.M.திலகரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார்.
மாலை 07.00 மணியளவில் குறித்த கடற்படை வீரர் தாக்கப்பட்டு உயிருடன் மீட்கப்பட்டு கடற்படை வைத்தியப் பிரிவில் முதலுதவி அளிக்கப்பட்டு பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வேளையிலே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனேர்.
- எம்.எஸ்சம்சுல் ஹுதா, பொத்துவில் -
பாணமை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட தென்கிழக்கு கடற்படைத் தலமையகத்தில் கடற்படை வீரராக கடமையாற்றி வந்த 35வயதுடைய அம்பாறை தமன பிரதேசத்தைச் சேர்ந்த W.S.M.திலகரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார்.
மாலை 07.00 மணியளவில் குறித்த கடற்படை வீரர் தாக்கப்பட்டு உயிருடன் மீட்கப்பட்டு கடற்படை வைத்தியப் பிரிவில் முதலுதவி அளிக்கப்பட்டு பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வேளையிலே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனேர்.
- எம்.எஸ்சம்சுல் ஹுதா, பொத்துவில் -