எமது சமூகத்தின் உரிமைக்கு, விடிவுக்காய் உழைத்த தலைவருக்கு இரு கரமேந்தி பிராத்திக்கின்றேன் - பிரதி சுகாதார அமைச்சின் பொத்துவில் இணைப்பாளர் எம்.எச்.அப்துல் ரஹீம்

முஸ்லீம் சமூகத்திற்கு முகவரியும் விமோசனமும் தந்து எம் சமூகம் வளர்ச்சி பெற வாழ் நாளை அர்ப்பணித்து சமூகத்தின் உரிமைக்காக தன் உயிரை உரம் போட்டு இலங்கைச் சோனகர்களின் விடிவுக்காய் வீர நடை போட்டு வீர புருஷனாய் நின்று உழைத்து சமூகம் விடிவு பெறும் தருணத்தில்,
எம்மை விட்டு விடை பெற்றுச் சென்ற அன்றும் இன்றும் என்றும் எங்கள் உள்ளத்தில் நீங்கா இடம்பிடித்த தங்கத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் சுவர்க்கத்தை வழங்க வேண்டும் என்று இரு கரம் ஏந்தி கவலை நிறைந்த மனதுடன் கண்ணியமாய் பிராத்திக்கின்றேன்.


இவ்வண்ணம்
முஸ்லீம் காங்கிரஸின் உரிமைப் போர்வீரன்,
எம்.எச்.அப்துல் ரஹீம்
இணைப்பாளர்,
பிரதிச் சுகாதார அமைச்சு
பொத்துவில்
Previous Post Next Post