கிழக்கின் திருப்பதியாக விளங்கும் மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 08-06-2016 புதன்கிழமை கொடியேற்றம் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழா நடைபெற்று 19-06-2016. ஞாயிற்றுக்கிழமை பகல் 1008 சங்காபிஷேகம் இடம் பெற்று இரவு உறியடி உற்சவமும் தீமிதித்தலும் இடம் பெற்று மறு நாள் அதிகாலை திங்கட்கிழமை களுவன் கேணி சமுத்திரத்தில் தீர்த்த உற்சவம் இடம் பெறும்.
திருவிழா நிறைவு பெறும் வரை இந்து சமய கதாப் பிரசங்கமும் கூட்டுப் பிரார்த்தனைகள் இடம் பெற்று மாலையில் மேளக்கச்சேரி நடைபெறும்.
இதேவேளை இவ் ஆலயத்தின் இராஜகோபுர மேற்கு வாசல் கும்பாவிஷேகப் பெருவிழா 06-06-2016 திங்கட்கிழமை இடம் பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-சேனையூர் நிருபர்-
திருவிழா நிறைவு பெறும் வரை இந்து சமய கதாப் பிரசங்கமும் கூட்டுப் பிரார்த்தனைகள் இடம் பெற்று மாலையில் மேளக்கச்சேரி நடைபெறும்.
இதேவேளை இவ் ஆலயத்தின் இராஜகோபுர மேற்கு வாசல் கும்பாவிஷேகப் பெருவிழா 06-06-2016 திங்கட்கிழமை இடம் பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-சேனையூர் நிருபர்-