மன்னார் மாவட்டத்தின் முசலி,மாந்தை மேற்கு, மடு ஆகிய பிரதேச செயலகப் பொதுமக்கள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு றிசாத் பதியுதீன் வேண்டுகோள்


மன்னார் மாவட்டத்தின் முசலி,மாந்தை மேற்கு, மடு ஆகிய பிரதேச செயலகப் பொதுமக்கள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான
றிசாத் பதியுதீன் நகர நிர்மாண நீர் வழங்கள், வடிகாலமைப்பு  அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு கடிதம் மூலம் வேண்டியுள்ளார்.

தான் பிரதி நிதித்துவப்படுத்தும் வன்னி மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவில் வாழும் மக்கள் கடீநீர் தட்டுப்பாட்டினை  எதிர்கொண்டுள்ளதால் இது தொடர்பில் குறுகிய கால மற்றும் நிரந்தர  தீர்வு தொடர்பில் கவனம் செலுத்துமாறும் கேட்டுள்ளார்.

அதே வேளை முசலி பிரதேச செயலகப் பிரிவில் குடிநீர்ப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக வியாயடி நீர்த்தேக்கத்தில் இருந்து நீரை பெறும் வகையில் மதீப்பீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் கவனம் செலுத்தி இப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க போதுமான நடவடிக்கை எடுப்பதன் அவசியத்தையும் அமைச்சர் றிசாத் பதியுதீன்இஅமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-இர்ஸாத் ரஹ்மத்துல்லா-
Previous Post Next Post