Top News

கொத்தடுவ மற்றும் பேலியகொட பகுதிகளில் மருத்துவ முகாம் மற்றும் சுத்திகரிப்புப் பணிகளில் முஸ்லிம் எய்ட் ஊழியர்களும் தொண்டர்களும்

சனிக்கிழமை, (28)பேலியகொட பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவமுகாம்கள் மூன்று இடங்களில் முஸ்லிம் எய்ட் அமைப்பு,சுகாதாரஒருங்கிணைப்புக் கொமிட்டி உடன் இணைந்து மேற்கொண்டது.
ஒருங்கிணைப்புக் கொமிட்டியினூடாக எம் எஸ் சீடி, எஸ் எப் ஆர் டி ஆகியஅமைப்புகள் மருத்துவமுகாம் செயற்பாடுகளில் தத்தமது பங்களிப்புகளை வழங்கியிருந்தன.

500 இற்கும் அதிகமானமக்கள் மருத்துவமுகாம்கள் மூலமாகபயன்பெற்றனர்.
தவிரவெள்ளநீரினால் முற்றாக மூழ்கடிக்கட்டுஉடைமைகள் சிதைந்துகிடந்தவீடுகளைச் சுத்தம் செய்துகொடுக்கும் பணியிலும் முஸ்லிம் எய்ட் ஊழியர்களும் அதன் பங்காளர்அமைப்பு தடயம் மற்றும் கெக்கிராவ தொண்டர்கள் 47 கொத்தடுவமஹல்லாவைச் சேர்ந்தஅம்பகஹ சந்தி,கம்மகஹவத்தலேன் ஆகியபகுதிகளிலுள்ளவீடுகளைசுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
முஸ்லிம் எய்ட் ஊழியர்களும் தொண்டர்களும் நாளையும் மேற்படிபகுதிகளிலுள்ளவீடுகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

மேலும்,அடுத்தவாரம் முஸ்லிம் எய்ட் அமைப்பின் பங்காளர்மற்றும் தொண்டர்அமைப்புகளில் ஊழியர்கள் தொடர்ச்சியாகவீடுகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவர்.
-அஸீம்கிலாப்தீன்-
Previous Post Next Post