திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பின் தங்கிய கிராமமான சூடைக்குடா பாரதி வித்தியாலய மாணவர்களுக்கு விளையாட்டு பொம்மைகள் -காலணிகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை(12) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை இன்னர் வில் கிளப்பின் வேண்டுகோளின் படி இங்கிலாந்து நாட்டைச் சிறந்த திருமதி-மங்களேஸ்வரி ஜெயக்குமார் மற்றும் திருமதி விபு சக்திபவன் ஆகியோரின் அனுசரணையுடன் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இன்னர் வில் கழகத்தின் தலைவி திருமதி கௌசி குணாளன் கலந்து கொண்டார்.
அதில் உரையாற்றிய திருமதி கௌசி குணாளன் -கல்வியானது அனைவருக்கும் உரித்தானது. வறுமையில் பிறந்தாலும் சரி -பணக்காரனாக பிறந்தாலும் சரி கல்வியை கற்பதற்கு அனைவருக்கும் உரிமைகள் உண்டு.
நானும் ஏழையாகவே பிறந்தேன். நான் கல்விக்கு கொடுத்த கெளரவமே என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது. நீங்கள் அனைவரும் சிறந்த முறையில் கல்வியை கற்று நல்ல பிரஜையாக வர வேண்டும். எனவும் தெரிவித்தார்
இதில் அதிபர் -ஆசிரியர்கள் -இன்னர் வீல் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
-எப்.முபாரக்-
திருகோணமலை இன்னர் வில் கிளப்பின் வேண்டுகோளின் படி இங்கிலாந்து நாட்டைச் சிறந்த திருமதி-மங்களேஸ்வரி ஜெயக்குமார் மற்றும் திருமதி விபு சக்திபவன் ஆகியோரின் அனுசரணையுடன் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இன்னர் வில் கழகத்தின் தலைவி திருமதி கௌசி குணாளன் கலந்து கொண்டார்.
அதில் உரையாற்றிய திருமதி கௌசி குணாளன் -கல்வியானது அனைவருக்கும் உரித்தானது. வறுமையில் பிறந்தாலும் சரி -பணக்காரனாக பிறந்தாலும் சரி கல்வியை கற்பதற்கு அனைவருக்கும் உரிமைகள் உண்டு.
நானும் ஏழையாகவே பிறந்தேன். நான் கல்விக்கு கொடுத்த கெளரவமே என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது. நீங்கள் அனைவரும் சிறந்த முறையில் கல்வியை கற்று நல்ல பிரஜையாக வர வேண்டும். எனவும் தெரிவித்தார்
இதில் அதிபர் -ஆசிரியர்கள் -இன்னர் வீல் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
-எப்.முபாரக்-