நிலாவெளி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

திருகோணமலை-நிலாவெளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சடலம் ஞாயிற்றுக்கிழமை(6)முற்பகல் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் இந்திய மீனவராக இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். எனினும், இந்திய மீனவர் என உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் எதுவும் கிடையாதென பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

நிலாவெளி பகுதியில் கரையொதுங்கிய சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
   -எப்.முபாரக்- 
Previous Post Next Post