காயாங்கேணி கீரிகுடா கடற்கரை வீதியின் அவல நிலை-மக்கள் அவதி

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் , காயாங்கேணி கீரிகுடா கடற்கரை  வீதி மிக நீண்­ட­கா­ல­மாக புன­ர­மைக்­கப்­ப­டாமல் மக்கள் பயணிக்க முடி­யாத நிலையில் காணப்­ப­டு­வ­துடன் பரு­வ­மழை காலங்­களில் வீதி­களில் வெள்ளநீர் தேங்கிக்  இருப்பதால்  மக்கள் போக்குவரத்துக்கு மிக மோச­மாக சேத­ம­டைந்து காணப்­ப­டு­கின்­றன.
வாகரை பிரதான வீதியில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் இவ் வீதியில் பயணிக்கும்  பெருமளவான  மீனவர்கள் உட்பட இவ் வீதியில் அமைந்துள்ள உல்லாச விடுதிக்கு வருகின்ற வெளிநாட்டு   உல்லாச பயணிகள் பெரும் அசவ்கரியத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
  இவ் வீதியில் புதிதாக அமைக்கபட்ட தொழில்சாலை ஒன்றின் தேவைக்காக இவ் வீதியால் கனகரக வாகனகள் தொடர்ந்தும் பயணிப்பதால் இவ் வீதி மோசமாக பாதிக்கபட்டுள்ள தாகவும் உடனடியாக இவ் வீதியை புனரமைத்து தருமாறும் அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
-thagi varan-
Previous Post Next Post