உளவளத்துணை பிரிவு சமூக வலுவூட்டல் மற்றும் நலத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய உளவளத்துணை தின விழிப்புணர்வு நிகழ்வுகள்(photos)

உளவளத்துணை  பிரிவு சமூக வலுவூட்டல் மற்றும் நலத்துறை அமைச்சின் ஏற்பாட்டில்  தேசிய உளவளத்துணை தின விழிப்புணர்வு நிகழ்வுகள்  தேசிய மட்டத்தில் இடம்பெற்று வருகின்றது .
இதன் ஒரு நிகழ்வாக  “  உன்னதமான உள நலத்தை நோக்கிய உளவளத்துணை “ எனும் தொனிப்பொருளில்   விழிப்புணர்வு நிகழ்வு இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச  செயலாளர்  வி .தவராசா  தலைமையில்  பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது .

உளவளத்துணை  தொடர்பாக விழிப்புணர்வுகளையும் அது தொடர்பாக கருத்துக்களையும்  வழங்குவதற்கான கலந்துரையாடல்  மண்முனை வடக்கு பிரதேச செயலைக அலுவலக உத்தியோகத்தர்களுக்கும் மற்றும்  பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்குமான   நிகழ்வு   இடம்பெற்றது .

இந்நிகழ்வில் உரையாற்றிய  பிரதேச செயலாளர் கூறுகையில் பொது மக்களுடன் சேர்ந்து பல்வேறு பட்ட விடயங்களில்  களத்திலே இருந்து அவர்களின் மனநிலைக்கு ஏற்ப கடமைகளை செய்பவர்கள்  அரச  உத்தியோகத்தர்கள் .  எனவே பொது மக்களின் மனநிலை அறிந்து அவர்களின்  தேவைகளை  பூரண திருபத்தியுடன்  செய்வதற்கு   மனநிலை பக்குவம் தேவை அதனை இந்த உளவளத்துணை   விழிப்புணர்வு  ஏற்படுத்துவதாக தெரிவித்துக்கொண்டார்
இந்நிகழ்வில்   மண்முனை வடக்கு பிரதேச செயலக உளவளநலத்துறை உத்தியோகத்தர்  திருமதி .யு . சுபாநந்தினி  ,   வளவாளராக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மனநல வைத்திய நிபுணர்  வைத்தியர்  டி .கடம்பநாதன்  மற்றும்  மண்முனை வடக்கு பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர்   கலந்துகொண்டார் .
-Anthony Leon raj-
Previous Post Next Post