மட்டக்களப்பில் புற்று நோய் பிரிவுக்கான புதிய வைத்தியசாலை

கிழக்கு மாகாணத்தினல்  முதன் முதலாக  புற்று நோய் பிரிவுக்கான  சகல  நவீன வசதிகளை கொண்ட வைத்தியசாலை  கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது .
250 மில்லியன் ரூபா செலவில்   அமைக்கப்பட்டுள்ள    நவீன வசதிகள் கொண்ட  புதிய கட்டடத்தொகுதியை     ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது .

இந்நிகழ்வுக்காக  எதிர் வரும் 13ஆம் திகதி  வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மட்டக்களப்புக்கு  விஜயம் செய்யவுள்ளார் .

இதன் ஆரம்ப கட்ட வேலைகள் பூர்த்தியடைந்ததை நிலையில்  ஜனாதிபதி வருகையினை முன்னிட்டு  புதிய கட்டிட  தொகுதியை  பார்வையிடுவதற்காக சுகாதார  அமைச்சின் சேவைகள்  வழங்கல்  பிரிவுக்கான பிரதி பணிப்பாளர்  குணரத்தன  இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயத்தை மேற்கொண்டார் .


மட்டக்களப்பு  புற்று நோய் வைத்தியசாலையின் கட்டிட தொகுதியை பார்வையிட வந்த  அமைச்சின் சேவைகள்  வழங்கல்  பிரிவுக்கான பிரதி பணிப்பாளர்  மற்றும் மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இப்ரால் லெப்பையுடன்   நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய  கட்டிட தொகுதிகளையும் பார்வையிட்டனர் .
-Anthony Leon raj-
Previous Post Next Post