மின்சார சபை கிரிக்கட் சுற்றுத்தொடரில் மட்டு.கல்வி வலயம் சாம்பியன்

இலங்கை மின்சாரசபையின் 46வதுபிறந்ததினத்தை சிறப்பிக்கும் முகமாக நடாத்தப்பட்ட மாபெரும் மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியின் ,இறுதிப்போட்டி நேற்று சிவாநந்தா விளையாட்டுமைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இச்சுற்றுப்போட்டியில் தமது பல்வேறு திறமைகளை வெளிக்காட்டிய மட்டக்களப்பு கல்விவலய அணியினர் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து சம்பியன் பட்டம் வென்றனர். ,இதன்போதுமுறையே 2ம், 3ம், 4ம் ,இடங்களை மட்டக்களப்பு கச்சேரிஅணியும்,மட்டக்களப்பு மத்திகல்விவலயஅணியும்,மண்முனைப்பற்றுபிரதேசசெயலகஅணியும்பெற்றுக்கொண்டன.

இவ் வைபவத்தில் மட்டக்களப்பு பிரதேச பிரதம மின் பொறியியலாளர் திருமதி.அனித்தா கல்முனை பிரதேச மின் பொறியலாளர்.ஆ.சு.ஆ.பர்கான் ஆகியோர் ; கலந்துசிறப்பித்தனர்.
-ஜவ்பர்கான்-

Previous Post Next Post