வாய்க்காலில் விழுந்த இளைஞரை வெள்ளநீர் இழுத்துச்சென்று பரிதாபகமாக பலி

கொக்கடிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி பிரதேசத்தில் வாய்க்காலில் விழுந்த இளைஞரை வெள்ளநீர் அடித்துச்சென்றதில் பரிதாபகரமான முறையில் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை 8மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கொக்டிச்கோலை தாந்தாமலை வீதியில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளார் 38வயதுடைய குடும்பஸ்தரான அழகையா செனவிரட்ன.அவரது மோhட்டர் சைக்கிள் சறுக்கி வாய்க்காலில் விழுந்தபோது அவர் வாய்க்காலில் விழுந்துள்ளார்.வாய்க்காலில் வெள்ளநீர் அதிகமாக பாய்வதால்  குறித்த இளைஞரை நீர் அடித்துச்சென்று சுமார் 100 மீற்றருக்கு அப்பால் போட்டுள்ளது.

மகிழடித்தீவைச் சேர்ந்த இவ்இளைஞரின் சடலம் நீரிலிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
-ஜவ்பர்கான்-
Previous Post Next Post