பொத்துவில்;மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் ஏற்பாட்டில் வாணிவிழா(படங்கள்)

பொத்துவில் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் ஏற்பாட்டில் அலுவலக பொறுப்பதிகாரி PDA.ஜெயகுமார் தலைமையில் வாணிவிழா நிகழ்வு இடம்பெற்றது
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கோட்டக்கல்வி பணிப்பாளர் மகாண V.ஜெயந்தன்,மாகாண  பிரதி  நீர்ப்பாசன பணிமனையின் சிரேஷ்ட பொறியியலாளர் எந்திரி G.சுஜிதரன் மற்றும் மாகாண பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி ULA.நசார் கலந்து கொண்டதுடன் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்,
இந்நிகழ்வில் இன்ஸ்பெக்டர் ஏத்தம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வு இடம்பெற்றதுடன் கிழக்கு மகாண முகாமைத்துவ அபிவிருத்தி பிரிவினால் நடாத்தப்பட்ட 2 நாள் அலுவலக  பணியாளருக்கான பயிற்சி நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

Previous Post Next Post