கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 3 கோடி தடுப்பூசிகள் இலங்கைக்கு அவசியம் என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எனினும் குறித்த தடுப்பூசிகளை இந்த வருடத்துக்குள் இலங்கைக்கு கொண்டு வருவதில் அசௌகரியங்கள் உள்ளதால், கொரோனாவைக் கட்டுப்படுத்த புதிதாக சிந்தித்து, புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான அவசியம் உள்ளதென்றார்.
நவம்பரில் 200 மில்லியன் தடுப்பூசிகளுக்கு முதலீடு செய்திருந்தால் தற்போது இந்த நாட்டில் தடுப்பூசி பிரச்சினை இருந்திருக்காது. எனவே அந்நிய செலாவணியை மாத்திரம் சிந்தித்து இந்திய சுற்றலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வந்ததால் இலங்கையில் தொற்று வேகமாகப் பரவியது என்றார்.