சுற்றுலா பயணிகளுக்கு 100 மில்லியன் ரூபா தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்-இலங்கையில்

நாட்டின் தேசிய காப்புறுதி நிதியம், நாட்டிற்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஒரு சுற்றுலாப் பயணிக்கு 100 மில்லியன் ரூபாவை காப்புறுதியாக வழங்க தேசிய காப்புறுதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி சனத் ஜி டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

-VK-
Previous Post Next Post