பொத்துவில் பிரதேச செயலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று பிரதேச செயலக மண்டபத்தில் செயலாளர் என்.எம். முஷாரத் தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச செயலக முஸ்லிம் உத்தியோகத்தர்களினால் வருடாவருடம் ஏற்பாடுசெய்யப்படும் இப்தார் நிகழ்வு இம்முறையும் பிரமாண்டமான முறையில் செயலகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டது.
பிரதேச தினைக்களத் தலைவர்கள், அரசியல்வாதிகள், பாதுகாப்புப்படை அதிகாரிகள், உலமாக்கள், கல்விமான்கள் என பெருமளவிலானவர்கள் கலந்துகொண்ட இப்தார் நிகழ்வில் விஷேட ரமழான் சொற்பொழிவை பொத்துவில் பிரதேச செயலக முஸ்லிம் கலை கலாச்சார பிரிவு உத்தியோகத்தர் அஷ்ஷெய்ஹ் ஏ.ஏ.அஸ்கர் நிகழ்த்தினார்.
-மரியமின் புத்திரன்-