திரும்பவும் ஸ்கூலுக்கு நிகழ்வுக்கான திறந்த அழைப்பிதழ்

பொத்துவில் மத்திய கல்லூரி மற்றும் பொத்துவில் அறிவார்ந்தோர் சங்கம் இணைந்து நடாத்தும் திரும்பவும் ஸ்கூலுக்கு எனும் நிகழ்வு எதிர்வரும் 2017.05.11ம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்காக திறந்த அழைப்பிதழ் மூலம் அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.
பாடசாலைக்கும் சமூகத்திற்குமிடையில் உள்ள பிணைப்பு ஒன்றை ஏற்படுத்தும் நோக்கிலும் பழைய மாணவர்களை ஒன்று சேர்த்து பொத்துவில் மத்திய கல்லூரியின் எதிர்காலச் கல்விச் செயற்பாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்;தவுமே குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

மேலும் குறித்த நிகழ்வுக்கான திறந்த அழைப்பிதழை குறித்த இரு அமைப்பினரும் எதிர்வரும் 2017.04.30ம் திகதி வரை மட்டுப்படுத்தியுள்ளதுடன் குறித்த நிகழ்வில் பங்கு கொள்வதற்கு கீழ்வரும் 0772289845, 0774277787 ஆகிய இலக்கங்களுடன் கொண்டு ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளும்படி விழா ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றேனர்.

Previous Post Next Post