திருகோணமலை கந்தளாய் சீனித்தொழிற்சாலைக்கு அருகில் மாடு மேய்ப்பதற்காக சென்றவரை காட்டு யானை தாக்கி இன்று சனிக்கிழமை (19) பிற்பகல் 2.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் இலக்கம் 219, பேராறு கந்தளாய் இல் வசித்து வந்த பக்கீர் தம்பி ஜமால்தீன் வயது 65 எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-எப்.முபாரக்-
இவ்வாறு உயிரிழந்தவர் இலக்கம் 219, பேராறு கந்தளாய் இல் வசித்து வந்த பக்கீர் தம்பி ஜமால்தீன் வயது 65 எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-எப்.முபாரக்-