மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன

இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்த்ன அடுத்த ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங் தலைமை பயிற்றுவிப்பாளராக இருந்த நிலையில், அவரது ஒப்பந்தம் நிறைவடைய உள்ளதால் மஹேல ஜயவர்தன  தலைமை பயிற்றுவிப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மஹேல ஜயவர்தன தெரிவிக்கையில், ஒரு சிறந்த அணிக்கு என்னை பயிற்றுவிப்பாளராக செயற்படுவதில் மகிழ்ச்சி. மும்பை இந்தியன்ஸ் அணி மிக பலமான ஒரு அணி. வெற்றிக்காக போராடக்கூடிய அணி. அடுத்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை மஹேல ஜயவர்தன தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டமைக்கு சங்கக்கார மற்றும் மெத்தியுஸ் ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post