இந்தியாவிலிருந்து ஆடை வியாபாரத்திற்காக திருகோணமலை வந்த நபரொருவர் மாரடைப்பு காரணமாக (22) பிற்பகல் 4 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் திருகோணமலை-அன்புவெளி புரம் பகுதியில் வயோதிபரொருவரின் வீட்டில் ஒரு வருடங்களாக ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்நதாகவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் இந்தியா-தமிழ்நாடு மதுரையைச்சேர்ந்த திலகர் அலஸ் சுபையன் மணிக்கந்தன் (52 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-எப்.முபாரக்-
குறித்த நபர் திருகோணமலை-அன்புவெளி புரம் பகுதியில் வயோதிபரொருவரின் வீட்டில் ஒரு வருடங்களாக ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்நதாகவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் இந்தியா-தமிழ்நாடு மதுரையைச்சேர்ந்த திலகர் அலஸ் சுபையன் மணிக்கந்தன் (52 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-எப்.முபாரக்-