Top News

பொலிஸாரின் அடக்கு முறைக்கு எதிராக மாணவர்கள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்களால் வியாழக்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பு உயர் தேசிய கணக்கீட்டு கற்கை நெறி மாணவர்களினால் இன்று அமைதியான முறையில் கண்டணப்பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் என்பன நடாத்தப்பட்டன.
மட்டக்களப்பு கல்முனை பிரதானவீதியில் மறியல் மற்றும் கண்டன பேரணயிலும் மாணவர்கள் ஈடுபட்டனர்.
கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உரிமை மீறல்களையும் அத்து மீறல்களையும் கண்டித்தும் உயர் தேசிய கணக்கீட்டு கற்கை நெறி (HNDA) தொடர்பான தமது உரிமை கோரிக்கைகளை வலுப்படுத்தியும்,
அதற்கான தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் மட்டக்களப்பு உயர் கல்வியகத்தை (ATI) சேர்ந்த முழு, பகுதிநேர மாணவர்கள் இன்றுகாலை 10 மணிக்கு அமைதியான முறையில் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
-ஜவ்பர்கான்-
Previous Post Next Post