திருகோணமலை பாலையூற்று ஸ்ரீவாணி வித்தியாலயத்தின் புலமைப்பரிசில் பாராட்டு விழா கடந்த திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் பாடசாலை அதிபர் திருமதி. வி. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ. க. துரைரட்ணசிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வின் சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்களாக உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு. எஸ். கணேசலிங்கம் மற்றும் சிகரம் பௌன்டேசன் அமைப்பாளர் திரு. கே. கோணேஸ்வரநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாடசாலை திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற இப்பாராட்டு விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உட்பட ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர். சித்திபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பதக்கங்களும் நினைவுக்;கேடயங்களும் சான்றிதழ்களும் விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
-சேனையூர் நிருபர்-