பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் திருகோணமலை சிறைச்சாலைக்கு விஜயம்.

திருகோணமலை மாவட்டத்தின்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் புதன்கிழமை (18)திருகோணமலை சிறைச்சாலைக்கு விஜயம் செய்து அங்குள்ள இரண்டு அரசியல் கைதிகளின் விபரங்களையும் கேட்டறிந்து கொண்டார்.

அத்தோடு சிறைச்சாலை அத்தியட்சகர் யூ.ஜி.டபிள்யு.தென்னக்கோனிடம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் அமர்வதற்கான கட்டடமொன்றையும் அமைத்து தருவதாக வாக்குறுதியளித்தார்.      இச்சந்திப்பில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.
-எப்.முபாரக்-   
Previous Post Next Post