காட்டு யானை தாக்கியதில் வாழைச்சேனையில் ஒருவர் மரணம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மீயங்குளம் என்ற இடத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர்  இன்று மாலைஉயிரிழந்துள்ளார் .
அடையாளப்படம்
இச்சம்பவத்தில்  படுகாயமடைந்த ஓட்டமாவடி மௌலானா வீதியைச்சேர்ந்த முகமது ஹனிபா(56)  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைகள்  அளிக்கப்பட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலீசார் தெரிவித்தனர்.

இப்பகுதியில் குப்பைகள் அதிகமாக  கொட்டப்படுவதால் அண்மைக்காலமாக  கா ட்டு யானைகள் பிரதான பாதையை அன்டிய பகுதிகளில் நடமாடுவது அதிகரித்துள்ளதாக  இப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
-ஜே.எப்.காமிலா பேகம்-
Previous Post Next Post