மு.காவின் அம்பாறை மாவட்ட மத்திய குழுக்களை தெரிவு செய்வது தொடர்பான கலந்தரையாடல்

-பைஷல் இஸ்மாயில்-

ஸ்ரீலங்கா முஸ்லிம்                     காங்கிரஸ்                        கட்சியின் அம்பாறை மாவட்ட மத்திய குழுக்களை தெரிவுசெய்வது தொடர்பான கலந்தரையாடல் கடந்த 22ம் திகதி இடம்பெற்றது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான என்.ரீ.ஹசனலி தலைமையில் அக்கரைப்பற்று தேசிய நீர் வழங்கள் வடிகால் அமைப்பு சபையின் விடுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்திலுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், அமைப்பாளர்கள், உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேசங்களில் கட்சியின் நடவடிக்கைகள் எவ்வாறு அமையவேண்டும் அதற்கான பங்களிப்புக்கள் மற்றும் அமைப்பாளர்களின் முன்னெடுப்புக்கள் எவ்வாறு இடம்பெறல் வேண்டும் என்பது பற்றி மிகத் தெளிவாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான என்.ரீ.ஹசனலி கூறினார்.

இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் அட்டாளைச்சேனை பிரதேசம் தொடர்பான பல கருத்துக்களையும் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தத்தமது பிரதேசத்தில் நிலவும் பிரச்சினை தொடர்பில் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்தனர்.

Previous Post Next Post